SSLC / 10th Social Science - Book Back Answers - Civics Unit 2 - Tamil Medium
Tamil Nadu Board 10th Standard Social Science - Civics Unit 2: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 2 – Civics from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at Samacheer Kalvi Guide.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and thoroughly memorise these subtopics. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of the Civics Unit 2, along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
1 Mark Questions: Choose the correct answer, fill in the blanks, identify the correct statement, and match the following
2 Mark Questions: Answer briefly
3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 2
நடுவண் அரசு
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1. நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் ……………… ஆவார்.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) தலைமை நீதிபதி
இ) பிரதம அமைச்சர்
ஈ) அமைச்சர்கள் குழு
2. ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
இ) நாடாளுமன்ற விவகார அமைச்சர்
ஈ) லோக் சபாவின் சபாநாயகர்
3. அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) மக்களவை
இ) பிரதம அமைச்சர்
ஈ) மாநிலங்களவை
4. லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது …………………….
அ) 18 வயது
ஆ) 21 வயது
இ) 25 வயது
ஈ) 30 வயது
5. இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற அமைப்பு .
அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதம அமைச்சர்
இ) மாநில அரசாங்கம்
ஈ) நாடாளுமன்றம்
6. கீழ்க்கண்ட எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்.
அ) சட்டப்பிரிவு 352
ஆ) சட்டப்பிரிவு 360
இ) சட்டப்பிரிவு 356
ஈ) சட்டப்பிரிவு 365
7. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்
அ) குடியரசுத் தலைவர்
ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
இ) ஆளுநர்
ஈ) பிரதம அமைச்சர்
II. கோடிட்டஇடங்களை நிரப்புக.
1. ……………………… மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது.
2. ……………… நாட்டின் உண்மையான தலைவராகவும், நாட்டின் முக்கியச் செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
3. …………….. அலுவல் வழியில் மாநிலங்களவையின் தலைவர் ஆவார்.
4. நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றவும், கூட்டத்தொடரில் பங்கு கொள்ளவும் உரிமை பெற்றவர் ……………….
5. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது …………………
6. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் ………………. ஆகும்.
7. தற்சமயம், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளின் எண்ணிக்கை ……………………
விடைகுறிப்பு:
நிதி
பிரதம அமைச்சர்
துணைக் குடியரசுத் தலைவர்
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
65
உச்ச நீதிமன்றம்
28
III. சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்
1. (i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.
(ii) இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
(iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.
(iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அ) ii & iv சரியானவை
ஆ) iii & iv சரியானவை
இ) i& iv சரியானவை
ஈ) i, ii & iii சரியானவை
விடைகுறிப்பு:
ஈ) i, ii & iii சரியானவை
2. (i) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.
(ii) நடுவண் அரசின் மூன்றாவது அங்கம் நீதிதுறை ஆகும்.
(iii) அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது.
(iv) உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.
அ) ii & iv சரியானவை
ஆ) iii & iv சரியானவை
இ) i & iv சரியானவை
ஈ) i & ii சரியானவை
விடைகுறிப்பு:
அ) ii & iv சரியானவை
V. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி
1. இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
விடைகுறிப்பு:
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை:
குடியரசுத் தலைவர், ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின்படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
வாக்காளர் குழுமம் என்பது மக்கள் பிரதிநிதிகளைக் குறிக்கிறது.
2. மத்திய அரசின் பல்வேறுபட்ட அமைச்சர்களின் வகைகள் யாவை?
விடைகுறிப்பு:
மத்திய அரசின் பல்வேறுபட்ட அமைச்சர்களின் வகைகள்:
கேபினெட் அமைச்சர்கள் அல்லது ஆட்சிக்குழு அமைச்சர்கள்.
இராஜாங்க அமைச்சர்கள்.
இணை அமைச்சர்கள்.
3. நிதி மசோதா என்றால் என்ன?
விடைகுறிப்பு:
நிதி மசோதா:
குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் மக்களவையில் மட்டுமே கொண்டுவர முடியும்.
நிதி மசோதாவை மாநிலங்களவையில் திருத்தவோ, நிராகரிக்கவோ முடியாது.
4. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள் இரண்டினைப் பட்டியலிடு.
விடைகுறிப்பு:
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள்:
இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் பேசுவதற்கும், பங்கேற்பதற்கும் உரிமை.
5. உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
விடைகுறிப்பு:
உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள்:
இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
ஐந்து ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி இருத்தல் வேண்டும்.
10 ஆண்டுகள் உயர்நீதிமன்ற வழக்குரைஞராக பணியாற்றி இருத்தல் வேண்டும்.
VI.விரிவான விடையளி
1. இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை விவரி.
விடைகுறிப்பு:
இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்:
நிர்வாக அதிகாரங்கள்:
பிரதம அமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தல்.
மாநில ஆளுநர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்தல்.
சட்டமன்ற அதிகாரங்கள்:
நாடாளுமன்ற கூட்டத் தொடரை துவக்கி வைத்தல், மசோதாவை சட்டமாக மாற்றுதல்.
மக்களவையில் - 2, மாநிலங்களவையில் 12 என நியமன உறுப்பினர்களை நியமித்தல்.
நிதி அதிகாரங்கள்:
நிதி மசோதா மற்றும் வரவு செலவு திட்டத்தை மக்களவையில் சமர்பிக்க அனுமதித்தல்.
அவசரகால நிதியை பராமரித்தல், ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நிதிக்குழு அமைத்தல்.
நீதி அதிகாரங்கள்:
ஒருவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையைக் குறைத்தல், ஒத்தி வைத்தல், விடுவித்தல்.
தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு வழங்குதல், மரண தண்டனையை ரத்து செய்தல்.
இராணுவ அதிகாரங்கள்:
மற்ற நாடுகளின் மீது போர் அறிவித்தல், அமைதியை ஏற்படுத்துதல் ஆகியன செய்தல்.
பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதியாக இருத்தல், இராணுவத்தை வழிநடத்துதல்.
இராஜதந்திர அதிகாரங்கள்:
இந்தியத் தூதர்களை நியமித்தல் மற்றும் வெளிநாட்டுத் தூதர்களை வரவேற்றல்.
மற்ற நாடுகளுடன் உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் மேற்கொள்ள ஒப்புதல் தருதல்.
நெருக்கடி நிலை அதிகாரங்கள்:
தேசிய நெருக்கடி நிலை, மாநில நெருக்கடி நிலை, நிதி நெருக்கடி நிலை அறிவித்தல்.
போர், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, ஆயுதமேந்திய கிளர்ச்சி ஏற்படும் போது அறிவித்தல்.
2. இந்தியப் பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?
இந்தியப் பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள்:
அமைச்சர்களின் நிலையை அறிந்து அரசின் பல்வேறு துறைகளை ஒதுக்கீடு செய்வது.
தனது அமைச்சரவைக் கூட்டத்தின் தேதி மற்றும் நிகழ்ச்சி நிரல் பற்றி முடிவு செய்வது.
குடியரசுத் தலைவருடன் மத்திய அரசு விவகாரம், சட்ட முன்மொழிவுகள் விவாதித்தல்.
குடியரசுத் தலைவருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பாலமாகச் செயல்படுகிறார்.
நாட்டின் உண்மையான தலைவராகவும், செய்தித் தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
காமன்வெல்த், அணிசேரா நாடுகள் மற்றும் சார்க் நாடுகள் மாநாடுகளில் பங்கேற்றல்.
கேபினெட் கூட்டம் நடைபெறாத போது மூத்த அமைச்சர்களை கலந்தாலோசிக்கலாம்.
அமைச்சரவையின் தலைவராக பல்வேறு துறைகளின் பணிகளை மேற்பார்வையிடுதல்.
3. நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை திறனாய்வு செய்க.
நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்:
சட்டம் இயற்றுதல், சர்வதேச உறவுகள், உள்நாட்டுக் கொள்கைகளை விவாதித்தல்.
நிர்வாகத்தினை மேற்பார்வையிடுதல், வரவுசெலவு திட்டத்தினை நிறைவேற்றுதல்.
குடியரசுத் தலைவர் மீது சுமர்த்தப்பட்ட அரசியல் குற்றச்சாட்டுகளை விசாரித்தல்.
குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்குதல்.
தலைமை தேர்தல் ஆணையர், தலைமைக் கணக்கு தணிக்கையாளரை பதவி நீக்குதல்.
மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்தல், கேள்விகள் - விவாதங்கள் நடத்துதல்.
ஒத்திவைப்புத் தீர்மானங்களும், நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும் கொண்டு வருதல்.
பொதுமக்களின் குறைகளைப் போக்குதல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டுதல்.
4. இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் நீதிவரையறைகளை விளக்குக.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் நீதிவரையறைகள்:
அ) தனக்கேயுரிய நீதிவரையறை:
இந்திய அரசிற்கும் ஒன்று அல்லது பல மாநிலங்களுக்கும் இடையிலான சிக்கல்கள்.
அடிப்படை உரிமைகளை நடைமுறைபடுத்துவது தொடர்பாக எழுகின்ற சிக்கல்கள். டுத்துவது
ஆ) மேல்முறையீட்டு நீதிவரையறை:
உச்ச நீதிமன்றமே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகச் செயல்படுகிறது.
மாநில உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்குகளை தொடுக்கலாம்.
இ) ஆலோசனை நீதிவரையறை:
பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்த ஒரு சட்டத்தின் மீதும் ஆலோசனை வழங்குதல்.
குடியரசுத் தலைவர் புதிய சட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்தினைப் பெறுதல்.
ஈ) இதர நீதிவரையறை:
உச்ச நீதிமன்ற ஆணை இந்தியாவின் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்திற்கான விதிகளை உருவாக்குதல்.
உ) நீதிப்புனராய்வு:
ஒரு புதிய சட்டத்தினை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவித்தல்.
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இடையிலான பிரச்சனைகளை தீர்த்து வைத்தல்.