Samacheer Kalvi Guide Tamil Nadu State Board Text Book Solutions, Important Questions and Answers for All standards

இந்தியாவின் சர்வதேச உறவுகள் 10th Civics Unit 5 Book Back Solutions

SSLC / 10th Social Science - Book Back Answers - Civics Unit 5 - Tamil Medium

Tamil Nadu Board 10th Standard Social Science - Civics Unit 5: Book Back Answers and Solutions

    This post covers the book back answers and solutions for Unit 5 – Civics from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at Samacheer Kalvi Guide.

    We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and thoroughly memorise these subtopics. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

    By reviewing this material, you’ll gain a strong understanding of the Civics Unit 5, along with the corresponding book's back questions and answers (in PDF format).

Question Types Covered:

1 Mark Questions: Choose the correct answer, fill in the blanks, identify the correct statement, and match the following 

2 Mark Questions: Answer briefly 

3, 4, and 5 Mark Questions: Answer in detail

All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you! 


அலகு 5
இந்தியாவின் சர்வதேச உறவுகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லை ஆகும்?

அ) பர்மா – இந்தியா

ஆ) இந்தியா – நேபாளம்

இ) இந்தியா – சீனா

ஈ) இந்தியா – பூடான்



2. இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை?

1) ஜி 20

2) ஏசியான் (ASEAN)

3) சார்க் (SAARC)

4) பிரிக்ஸ் (BRICS)

அ) 2 மட்டும்

ஆ) 2 மற்றும் 4

இ) 2, 4 மற்றும் 1

ஈ) 1, 2 மற்றும் 3



3. ஒபெக் (OPEC) என்பது ……………….

அ) சர்வதேச காப்பீட்டு நிறுவனம்

ஆ) ஒரு சர்வதேச விளையாட்டுக் கழகம்

இ) எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு

ஈ) ஒரு சர்வதேச நிறுவனம்



4. இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது?

அ) வங்காளதேசம்

ஆ) மியான்மர்

இ) ஆப்கானிஸ்தான்

ஈ) சீனா



5. பின்வருவனவற்றைப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து சரியான விடைகுறிப்புயைத் தேர்ந்தெடுக்கவும்.

i) சல்மா அணை – 1. வங்காளதேசம்

ii) பராக்கா ஒப்பந்தம் – 2. நேபாளம்

iii) சுக்கா நீர்மின்சக்தி திட்டம் – 3. ஆப்கானிஸ்தான்

iv) சாரதா கூட்டு மின்சக்தித் திட்டம் – 4. பூடான்

அ) 3 1 4 2

ஆ) 3 1 2 4

இ) 3 4 1 2

ஈ) 4 3 2 1



6. எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?

அ) 5

ஆ) 6

இ) 7

ஈ) 8



7. எந்த இரண்டு தீவுநாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும்?

அ) இலங்கை மற்றும் அந்தமான் தீவுகள்

ஆ) மாலத்தீவு மற்றும் லட்சத் தீவுகள்

இ) மாலத்தீவு மற்றும் நிக்கோபார் தீவு

ஈ) இலங்கை மற்றும் மாலத்தீவு



8. எந்த இந்திய மாநிலம் மூன்று நாடுகளால் சூழப்பட்டுள்ளது?

அ) அருணாச்சலப்பிரதேசம்

ஆ) மேகாலயா

இ) மிசோரம்

ஈ) சிக்கிம்



9. எத்தனை மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?

அ) ஐந்து

ஆ) நான்கு

இ) மூன்று

ஈ) இரண்டு



10. சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்

அ) மவுண்ட்பேட்டன் பிரபு

ஆ) சர் சிரில் ராட்க்ளிஃப்

இ) கிளிமன்ட் அட்லி

ஈ) மேற்கூறிய ஒருவருமில்லை



II. கோடிட்டஇடங்களை நிரப்புக.

1. இமயமலையில் உள்ள ஒரு சிறிய முடியாட்சி நாடு ____பூட்டான்_____ ஆகும்.

2. இந்தியா, தென்கிழக்காசியாவிற்குள் செல்வதற்கான ஒரு நுழைவு வாயிலாக __மியான்மர்____ இருக்கிறது.

3. இந்தியாவிற்குச் சொந்தமான ____டீன்பிகா___ என்ற பகுதி மேற்கு வங்காளம் – வங்காளதேச எல்லையில் அமைந்துள்ளது.

4. இடிமின்ன ல் நிலம் என்று அறியப்படும் நாடு _____பூட்டான்____ ஆகும்.



III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. இந்தியா மற்றும் மியான்மரின் கலடன் போக்குவரத்துத் திட்டம் பின் வரும் போக்குவரத்து முறையில் எந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது?

1) சாலை

2) ரயில் வழி

3) கப்பல்

4) உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.

அ) 1, 2 மற்றும் 3

ஆ) 1, 3 மற்றும் 4

இ) 2, 3 மற்றும் 4

ஈ) 1, 2, 3 மற்றும் 4



2. கூற்று : இந்தியாவும் பிரான்சும் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியைத் (International – Solar Alliance) தொடங்கியுள்ளன.

காரணம் : இது கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றுக்கு இடையேயான நாடுகளைச் சூரிய ஆற்றலுக்கான ஒத்துழைப்பில் ஒன்றிணைப்பதற்காகும்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

இ) கூற்று தவறு, காரணம் சரி.

ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.



V. சுருக்கமாக விடையளிக்கவும்

1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக

✰  பாகிஸ்தான்
✰ ஆப்கானிஸ்தான்
✰ சீனா
✰  நேபாளம்
✰ பூடான்
✰ வங்காளதேசம்
✰  மியன்மார்
✰ இலங்கை
✰ மாலத்தீவு

2. போர்த்திறன் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (SPA) பற்றி சிறு குறிப்பு வரைக.

✰ இந்தியா, ஆப்கானிஸ்தான் உறவு இந்த ஒப்பந்தம் மூலம் வலிமை பெற்றுள்ளது.
✰ இதன் மூலம் ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பு, மறுசீரமைப்பு, நிறுவனங்கள்.
வேளாண்மை, நீர், கல்வி, சுகாதாரம் மற்றும் வரியில்லாமல் இந்திய சந்தையை எளிதில் அடைதல் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கு வழிவகை செய்கிறது.

3. கல்டன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம் பற்றி நீவிர் அறிவது என்ன?

✰ இத்திட்டத்தினை இந்தியா உருவாக்கி வருகிறது
✰ இது கொல்கத்தாவை மியன்மாரில் உள்ள சிட்வேயுடன் இணைப்பதற்கான சாலை-நதி- துறைமுகம்-சரக்கு போக்குவரத்து திட்டமாகும்.

4. ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனத்தின் (JIM) பங்கு என்ன?


✰  உற்பத்தி துறையில், உற்பத்தி மற்றும் திறன் இந்தியா திட்டங்களில் பங்களிக்கவும் ஜப்பானிய உற்பத்தி திறன்களில் பங்களிக்கவும், ஜப்பானிய உற்பத்தித் திறன்களை வழங்கி இந்தியாவின் தொழில்துறை தளத்தை மேம்படுத்துவது.
✰ 30,000 இந்திய மக்களுக்கு பயிற்சி
✰ 2017-ல் 4 மாநிலங்களில் (குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு)-இந்த நிறுவனம் உருவானது.

5. சபஹார் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.

✰ இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட முக்கூட்டு ஒப்பந்தம்
✰ இதன்படி சபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்தி மூன்று நாடுகளிலும் போக்குவரத்து வழிதடங்கள் ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

6. பிரிக்ஸ் (BRICS)) உறுப்பு நாடுகளின் பெயரைக் குறிப்பிடுக.

1. பிரேசில் (B) 
2. ரஷ்யா (R) 
3. இந்தியா (1) 
4. சீனா (C)
5. தென்னாப்பிரிக்கா (S)

7. இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் ஐந்து உலகலாவிய குழுக்களை பட்டியடுக


1. பிரிக்ஸ்
2. ஐ.நா.சபை
3. சார்க் 4. G-20
5. அணிசேரா இயக்கம்
6. IBSA



VI. விரிவான விடை தருக. 

1.பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக.

1.பிரிக்ஸ் உருவாக காரணம்:
✰ உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு மாற்றகவும், அமெரிக்கா மேலாதிகத்திற்கு போட்டியாக பிரிக்ஸ் உருவானது.
✰ உறுப்பு நாடுகளிடையே பொருளாதார வளர்ச்சி திட்டங்களைநிறைவேற்றவும், சொந்த மற்றும் சுயமாக நிருபிக்கும் விதமாக உருவானது.

2. பிரிக்ஸின் நோக்கங்கள்:

✰ பிராந்திய வளர்ச்சி.
✰ வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிடையே பாலம் பால.
✰ மனித மேம்பாட்டிற்கு பரந்த அளவில் பங்களிப்பு.
✰ அதிக சமத்துவம் மற்றும் நியாயமான உலகத்தை ஏற்படுத்துதல்.
✰ வாணிகத்திற்கு உள்நாட்டு நாணய பயன்பாடு ஊக்கம்.
✰ தொழில் நுட்ப பரிமாற்றம்.
✰ உலக நாடுகளிடையே பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்.

2.பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் (OPEC) திட்டம் குறித்தும் அவ்வமைப்பு எவ்வாறு பிற பிற நாடுகளுக்கு உதவி செய்கின்றன என்பது குறித்தும் குறிப்பிடுக.

1. OPEC திட்டம்:
✰ உறுப்பு நாடுகளுக்குள் எண்ணெய் கொள்கை.
✰ எண்ணெய் சந்தையை நிலைநிறுத்தல்.
✰ எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான நிலையான வருவாய்.
✰ எண்ணெய் நுகர்வு நாடுகளுக்கு திறமையான, சிக்கனமான, வழக்கமான வினியோகம்.

2.OPEC பிற நாடுகளுக்கு உதவி:
✰ OPEC மூலம் குறைந்த வட்டி வீதத்தில் கடன்.
✰ சமூக, மனிதாபிமான திட்டங்களுக்கு மானியம்.
✰ புத்தகங்கள், அறிக்கைகள், வரைபடங்கள், பெட்ரோலிய எரிசக்தி மற்றும் எண்ணெய் சந்தை தொடர்பான ஒரு தகவல் மையம் உள்ளது.
✰ இத்தகவல் மையத்தை பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர் .

3. இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள் குறித்தும் இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் மூன்று உலகளாவிய குழுக்கள் பற்றிய சிறப்பு அம்சங்கள் குறித்தும் எழுதுக.

✰ இந்தியா ஒரு வலிமை வாய்ந்த வல்லரசாக, உலகளாவிய செல்வாக்கு பெற்றுள்ளது.
✰ புதிதாக தொழில்மயமாக்கப்பட்ட நாடாக இருப்பதால் பல நாடுகளுடன் சிறந்த ஒத்துழைப்பு பல்வேறு சர்வ தேச அமைப்புகளில் முக்கிய உறுப்பினராகவும், சிலவற்றில் நிறுவன உறுப்பினராகவும் உள்ளது.

1.ஐ.நா.சபை
✰ ஐ.நா.வின் தீவிர ஆதரவாளராக தொடர்ந்து செயல்படுகிறது.
✰ உலக நாடுகளிடையே போர் ஏற்படாமல், உலக அமைதி, பாதுகாப்பை நிலை நாட்டுவதில் ஐ.நா.சபைக்கு இந்தியா உதவுகிறது.

2.அணிசேரா இயக்கம்
✰ இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகம் இரு வல்லரசு அணியாக (அமெரிக்கா, ரஷ்யா) பிரிந்து பனிப்போரில் ஈடுபட்டன.
✰ இந்தியா இரு அணியிலும் சேராமல் நடுநிலையாக உலக அமைதிக்கு பாடுபடுகிறது
3.சார்க்:
✰ உலக அமைதியை நிலைநாட்ட சார்க் என்ற பிராந்தியக் கூட்டமைப்பை இந்தியா ஏற்படுத்தியது.
✰ இதில் உறுப்பு நாடுகள் தங்களுக்குள் பரஸ்பர அடிப்படையில் போக்குவரத்து, கடித சேவை, சுற்றுலா, வானியல், சுகாதாரம், வேளாண்மை, தகவல் தொடர்பு போன்றவற்றில் உதவி செய்து வருகின்றன.
Share:

Total Pageviews